சுதந்திர தின விழா 75 வாரங்களுக்கு நடைபெறும் - பிரதமர் மோடி
Mar 11, 2021 181 views Posted By : YarlSri TV
சுதந்திர தின விழா 75 வாரங்களுக்கு நடைபெறும் - பிரதமர் மோடி
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டங்கள், 12-ந்தேதி (நாளை) குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்குகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற எம்.பி.க்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களை வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துவர வேண்டும். தடுப்பூசி மையத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் உதவ வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் திறமையான, உறுதியான தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் பேசினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago