டிக்கெட் கேட்டு சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள்!
Apr 08, 2022 85 views Posted By : YarlSri TV
டிக்கெட் கேட்டு சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள்!
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி அன்று வெளியாகிறது. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கடலூர் பகுதியில் உள்ள நான்கு திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நான்கு திரையரங்கிலும் ரசிகர்கள் காட்சிகள் வெளியிட வேண்டுமென்று என்றும், அந்த காட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால், கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரசிகர்களும் டிக்கெட் வாங்க குவிந்துள்ளனர். அப்போது விஜய் ரசிகர்கள் சார்பில் ரசிகர் ஸ்பெஷல் காட்சி டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு தியேட்டர் சார்பில் டிக்கெட் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் திடீரென்று கடலூர் - புதுவை சாலையான பாரதி சாலையில் திரையரங்கத்திற்கு முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் விரைந்து வந்து விஜய் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர் போலீசார்.
மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வேறு ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago