Skip to main content

மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்- மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை

Apr 03, 2022 96 views Posted By : YarlSri TV
Image

மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்- மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை 

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:



மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு  மகாராஷ்டிரா அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும்.



நான் பிரார்த்தனை அல்லது எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது சொந்த மதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலின் போது நான் எதிர்த்த சக்திகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு முதலமைச்சர் துரோகம் இழைத்துவிட்டார். 



மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. தேவேந்திர ஃபட்னாவிஸை முதலமைச்சராக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது  உத்தவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், அவருக்கு முதல்வராகும் எண்ணம் வந்தது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். 



தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள். அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்? இவ்வாறு ராஜ்தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை