Skip to main content

வவுனியாவில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற சம்பவம்!

Apr 03, 2022 58 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற சம்பவம்! 

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையில் ஊரடங்கு வேளையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.



இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03-04-2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 



மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.



இதன்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்டபோது, மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து, அவர் மீது வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.



தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில், இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றுள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை