மட்டக்களப்பை உலுக்கிய மாணவியின் மரணம்; சந்தேகநபரை காப்பாற்ற முன்னிற்கும் ஆயுதக்குழு!
Apr 01, 2022 67 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பை உலுக்கிய மாணவியின் மரணம்; சந்தேகநபரை காப்பாற்ற முன்னிற்கும் ஆயுதக்குழு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச்சங்கேணி பகுதியில் கா.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் தந்தை இறந்த நிலையில், தாயார் வெளிநாடு சென்ற சூழலில் , அம்மாணவி பனிச்சங்கேணியில் வசிக்கும் திருமணமான சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு உணவு உண்ட பின்னர் உறங்கச்சென்ற மாணவி , அவரது வீட்டிலேயே காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவியின் காது , மூக்கு மற்றும் பெண்ணுறுப்பில் இரத்தம் வழிந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக, வைத்தியசாலை பிரேத பரிசோதனை பிரிவில் சேவையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை உடற்கூற்று பரிசோதனை முடிவடையவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகிக்கும் ஒருவரை, அங்குள்ள ஆயுதக்குழு ஒன்று காப்பாற்ற பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago