ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை கொல்ல சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது!
Jan 09, 2021 252 views Posted By : YarlSri TV
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை கொல்ல சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது!
ஒடிசா முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் (74). அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளதாக ஒரு மொட்டைக் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், கூலிப்படையினர் சிலர் உங்களை கொல்வதற்கு சதி செய்துள்ளனர். அவர்கள் தொழில் ரீதியிலான குற்றவாளிகள். ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களையும், பாதி தானியங்கி துப்பாக்கிகளையும் வைத்துள்ளனர். நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எச்சரிக்கையாக இருங்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான சதிகாரர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்துமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு மாநில அரசு சிறப்பு செயலாளர் (உள்துறை) சந்தோஷ் பாலா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல் மந்திரி இல்லம், அலுவலகம் ஆகியவற்றின் பாதுகாப்பையும், அவரது பயண பாதுகாப்பையும் பரிசீலித்து வலுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago