மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்- துபாய் அரசாங்கம் வியப்பு
Mar 28, 2022 74 views Posted By : YarlSri TV
மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்- துபாய் அரசாங்கம் வியப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ளார்.
அவருக்கு துபாயில் மிகப் பிரமாண்டமாக “நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்” என்ற நிகழ்ச்சி மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்.
இதனால் துபாய் நகரமே ஸ்தம்பித்துபோனது. இதன் காரணமாக துபாய் காவல் துறையினர் திணற நேரிட்டது. துபாய் அரசாங்கமும் அந்த மிகப் பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போய் விட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழ் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.
ஒட்டுமொத்த துபாய் மக்களையும், துபாய் அரசாங்கத்தையும் மிரள வைத்து வியக்கவைத்து இருப்பது மட்டுமல்லாமல், “யாருப்பா இவரு?’’ என்கிற அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் அமைந்துள்ளது.
பிரதமர்களுக்கே கிடைக்காத மதிப்பும், மரியாதையும், ஒரு மாநில முதல்வருக்கு கிடைத்து இருப்பது ரொம்பவே ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.
துபாய்க்கு எத்தனையோ நாட்டில் இருந்து பிரதமர்கள் வந்து விட்டு செல்கிறார்கள். ஆனால் யாருக்குமே இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது இல்லை.
முதன்முதலாக ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது ரொம்பவே பிரமிக்க வைக்க வைத்து இருப்பதாக துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பேர் வந்து, வரிசையில் நின்று இருந்தனர்.
அரங்கு முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பியதால் ஏராளமானோர் வெளியே நின்று இருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் சென்ற இடங்களில் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக பல அரேபியர்களும் அங்கே வந்து இருந்தனர்.
ஒரு மாநிலத்தோட முதல்வருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று துபாய் மக்கள் ஆச்சரியப்பட்டனர். துபாய் அரசாங்கமும் வியந்து போனது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்துப் பேசியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு உலக முதலீட்டாளர்கள்கிட்டே பல ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு www.a23.com என்ற இணையதளத் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இலங்கையிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ள ரஷ்யா! பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்தல்!
-
ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!
-
சீனாவில் நிகழ்ந்த சங்கிலி தொடர் சாலை விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்1
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago