கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி
Mar 22, 2022 81 views Posted By : YarlSri TV
கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சிஎஸ்கே அணியில் இந்திய ஆல் ரவுண்டர் அதிரடியாக மிரட்டுகிறார்.
சூரத்தில் சிஎஸ்கே அணிக்குள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் யார் சிறப்பாக விளையாடுகிறாரோ, அவர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க தோனி திட்டமிட்டு இருந்தார்.ஏற்கனவே குட்டி ஹர்திக் பாண்டியா என போற்றப்படும் ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் அதிரடியாக விளையாடும் நிலையில், அவரையே மிஞ்சிய ஒரு இந்திய ஆல் ரவுண்டர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆல் ரவுண்டர்
இந்திய அணியில் ஆல் ரவுண்டராக விராட் கோலியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சிவம் துபே. ஆர்சிபி அணியில் முதலில் இருந்தார், பின்னர் ஃபார்ம் குன்றியதால் ராஜஸ்தான் அணிக்கு விலை போனார். அங்கு அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சிஎஸ்கே.சிஎஸ்கேவின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இவருக்கு செலவு செய்த 4 கோடி ரூபாயை, டுபிளஸிஸ்க்கு தந்து இருக்கலாம் என கடுமையாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் தற்போது அடித்து உடைத்துள்ளார் சிவம் துபே. தோனி பந்தயம் கட்டிய குதிரை, தோற்காது என்று சொல்வதை போல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் துபே.
யுவராஜ் சிங் தனது இளமை காலத்தில் எப்படி செயல்பட்டாரோ அதே போல் மனுஷன் பேட்டிங்கில் அசத்திவிட்டார். வேகப்பந்து, சுழற்பந்துவீச்சு என சிக்சர்களை பறக்கவிட, எதிர் திசையில் நின்ற தோனியே அவரிடம் சென்று பாராட்டினார். சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டத்தை கண்ட சிஎஸ்கே பயிற்சி குழு துள்ளி குதித்து வருகின்றது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!
-
உக்ரைனில் திடீரென வெடித்து கடலுக்குள் மூழ்கிய நேட்டோ உறுப்பினர் நாட்டின் கப்பல்! நீடிக்கும் மர்மம்
-
பிரித்தானியாவின் பெரும் பகுதிகளுக்கு ரயில் சேவைகள் பாதிப்பு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago