உலகின் உணவுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக நட்பு நாடுகளுடன் களமிறங்கும் பிரித்தானிய போர்க்கப்பல்கள்
May 25, 2022 67 views Posted By : YarlSri TV
உலகின் உணவுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக நட்பு நாடுகளுடன் களமிறங்கும் பிரித்தானிய போர்க்கப்பல்கள்
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்பல்களைக் களமிறக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி போன்ற உணவுப்பொருட்களுக்காக பல ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் காத்துக்கொண்டிருக்க, ரஷ்ய போர்க்கப்பல்களோ, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்கள் வெளியே வரமுடியாதபடி கருங்கடல் பகுதியில் தடையாக நின்றுகொண்டிருக்கின்றன.
அந்த போர்க்கப்பல்களை அங்கிருந்து அகற்றினால்தான் உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை வெளியே கொண்டு வரமுடியும்.
அப்படி உக்ரைனிலிருந்து வரும் உணவுப்பொருட்கள் உலகச் சந்தைக்கு வந்து சேராவிட்டால், அடுத்த 10 முதல் 12 மாதங்களில் உலகம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கும் என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரான David Beasley.
ஆக, உலகில் உணவுப் பிரச்சினையை உருவாக்கத் திட்டமிட்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக, குறிப்பாக, உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் வெளியே வருவதற்கு தடையாக ரஷ்யா கருங்கடல் பகுதியில் நிறுத்தியுள்ள கப்பல்களிடமிருந்து, உணவு தானியங்களை வெளியே கொண்டு வரும் கப்பல்களுக்கு பாதுகாப்பதற்காக, அவற்றுடன் பயணிப்பதற்காக, போர்க்கப்பல்களை கருங்கடல் பகுதிக்கு அனுப்ப தனது நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.
அத்துடன், பிரித்தானியாவைப் போலவே அதன் கூட்டாளி நாடுகளும் சில அதிரடி திட்டங்களை வைத்துள்ளன.
அதாவது, உக்ரைன் துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்களுடன் வெளியே வரும் கப்பல்களுக்கு பிரித்தானிய போர்க்கப்பல்கள் பாதுகாப்பு அளிக்க திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், ரஷ்யக் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய Harpoon வகை ராக்கெட்களையும் அவற்றை ஏவக்கூடிய கருவிகளையும் டென்மார்க் நாடு உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
ஆக, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை வெளியே கொண்டு வந்து உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பிரித்தானியா, லிதுவேனியா, டென்மார்க் முதலான பல நாடுகள் கைகோர்த்துள்ளது, உணவு தானியங்களுக்காக காத்திருக்கும் நாடுகள் பலவற்றிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago