Skip to main content

யாழில் முரண்பட்டு வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்- உடனடியாக விரைந்த காவல்துறை!

May 24, 2022 101 views Posted By : YarlSri TV
Image

யாழில் முரண்பட்டு வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்- உடனடியாக விரைந்த காவல்துறை! 

யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 



யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயுபெற வந்த பொதுமக்களுக்கும் எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.



யாழில் முரண்பட்டு வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்- உடனடியாக விரைந்த காவல்துறை!



நேற்று இரவு பரமேஸ்வரா சந்தி எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு வந்திறங்கியதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



அதனை அடுத்து இன்று அதிகாலை முதல் குறித்த எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் எரிவாயு பெறுவதற்கு ஒன்று கூடி இருந்த நிலையில் எரிவாயு விநியோகஸ்தர் எரிவாயு இல்லை என தெரிவித்த போது பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.



யாழில் முரண்பட்டு வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்- உடனடியாக விரைந்த காவல்துறை!



அத்தோடு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் காவல்துறையினரின் தலையீட்டினால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை காவல்துறையினர் விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது எரிவாயு கொள்கலன் இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை சுகமானது.



 



Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை