Skip to main content

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா ராணுவம்

May 21, 2022 115 views Posted By : YarlSri TV
Image

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா ராணுவம் 

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. 



உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 87-வது நாளை எட்டியுள்ளது. மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.



சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.



மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா ராணுவம்



 



இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.



மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.





ரஷ்யா போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.



மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா ராணுவம்



 



கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய  படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை