Skip to main content

தப்ப முயன்ற திருடர்களை காரால் மோதி பொலிசாரிடம் சிக்க வைத்த வழக்கறிஞர்!

May 18, 2022 64 views Posted By : YarlSri TV
Image

தப்ப முயன்ற திருடர்களை காரால் மோதி பொலிசாரிடம் சிக்க வைத்த வழக்கறிஞர்! 

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தனது உடைமைகளைத் திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை அந்த வழக்கறிஞர் காரால் மோதி தள்ளிய புகைப்படம் வெளியாகியுள்ளது.



ஷியாவெனட்டோ என்ற அந்த வழக்கறிஞர் மேற்கூரை இறக்கப்பட்டிருந்த convertible ரக சொகுசு காரை சிக்னலில் நிறுத்திய போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அவர் அணிந்திருந்த ஏழே முக்கால் லட்ச ரூபாய் மதிப்பிலான கார்டியர் கைகடிகாரம், செயின் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர்.



அந்நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு பைக்கில் தப்ப முயன்றவர்களை ஷியாவெனட்டோ தனது காரால் மோதி கீழே தள்ளினார்.



அங்கிருந்து தப்பி செல்வதற்குள் பொலீசார் அவர்களைப் பிடித்தனர், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை