Skip to main content

யாழில் நள்ளிரவு பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த சோகம்!

May 18, 2022 84 views Posted By : YarlSri TV
Image

யாழில் நள்ளிரவு பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த சோகம்! 

யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த விபத்துச் சம்பவம் திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் இன்று நள்ளிரவு (17-05-2022) இடம்பெற்றுள்ளது.



மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது,



ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவுவண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து, தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.



இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.யாழில் நள்ளிரவு பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த சோகம்!


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை