யாழில் நள்ளிரவு பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த சோகம்!
May 18, 2022 84 views Posted By : YarlSri TV
யாழில் நள்ளிரவு பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் இன்று நள்ளிரவு (17-05-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது,
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவுவண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து, தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago