31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!
May 17, 2022 67 views Posted By : YarlSri TV
31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாக்கெடுப்பில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்தார்.
அத்துடன், வாக்கெடுப்பின் போது எந்தவொரு தரப்பினருக்கும் வாக்களிக்காமல் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.
அதேசமயம் வாக்களிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்ட தரப்பில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை செலுத்தியிருந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago