ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
May 13, 2022 70 views Posted By : YarlSri TV
ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக உள்ளது. அதிலும் சாதகமான நிலையை ரணில் எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனுதவியாக வழங்க பல நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதில் ஜப்பானும் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஜப்பான் அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்றுமதி நிதியளிப்பு நிறுவனமான இந்தியா எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.
நாடு அதன் மோசமான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு உடனடி கடன் மறுசீரமைப்பு அவசியமாக உள்ளதென எக்ஸிம் வங்கியின் நிர்வாக அதிகாரி ஹர்ஷா பங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago