டொலர் பற்றாக்குறையால் மற்றுமொரு துறையிலும் பெரும் பாதிப்பு
May 01, 2022 74 views Posted By : YarlSri TV
டொலர் பற்றாக்குறையால் மற்றுமொரு துறையிலும் பெரும் பாதிப்பு
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் மாதத்திற்கு சுமார் 60,000 ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய ஓட்டுநர் அட்டைகளை அச்சிட்டு வழங்க முடியவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஒரு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு தேவையான டொலர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago