ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
Feb 26, 2022 65 views Posted By : YarlSri TV
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மூன்றாவது நாளாக இன்றும் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டுமென்றும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன .இதையடுத்து தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை ரஷ்யா தோல்வியடைய செய்தது.
இதனிடையே இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி ரோமன் தற்போதைய சூழல் ஏற்படுவதற்கான காரணத்தை இந்தியா ஆழமாக புரிந்து கொண்டுள்ளது. எனவே பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் இந்தியாவின் ஆதரவை உக்ரைனும் எதிர்ப்பார்த்த சூழலில் இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago