Skip to main content

ரஷ்ய படையெடுப்பினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை வெளியிட்டுள்ள உக்ரைன்

Mar 09, 2022 71 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய படையெடுப்பினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை வெளியிட்டுள்ள உக்ரைன் 

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.



அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.



போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன.



உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.



இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கிடப்பட்டது.



பெரும்பாலான சேதமடைந்த கட்டமைப்புகள் ஒரு வருடத்தில் சரிசெய்யப்படும், மிகவும் கடினமானவை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படும். ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு நகரமான கார்கிவில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் மற்ற நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

19 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை