ஐ.பி.எல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விலைப்போன புதிய இளம் கிரிக்கட் வீரர்கள்!
Feb 13, 2022 69 views Posted By : YarlSri TV
ஐ.பி.எல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விலைப்போன புதிய இளம் கிரிக்கட் வீரர்கள்!
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் இன்றும் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் இடம்பெற்றது.
ஏலமிடப்பட்ட 600 பேரில் 377 பேர் இந்தியர்கள் ஆவர்.
இவர்களை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் காப்பாளர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், அனைத்துத்துறை ஆட்டவீரர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கேள்வி இருந்தது.
இந்தநிலையில் நேற்று ஏலத்தின்போது திடீரென மயங்கி வீழ்ந்த ஏலக்காரரான Hugh Edmeades சுகமடைந்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடியை வழங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக 15.25 கோடியை வழங்கியது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட ஏனைய வீரர்களின் விபரங்கள்- * இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 11.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது
* இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை 1 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது
* இந்திய வீரர் ஜெயந்த் யாதவை 1.70 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் விஜய் சங்கரை .1.40 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் கெளதமை 90 லட்சத்துக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை 6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை 1.10 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் மந்தீப் சிங்கை 1.10 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை 2.60 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
* தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை 4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை 5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை 2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் சந்தீப் சர்மாவை 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
* இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை 4.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இதேவேளை நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே, இந்திய வீரர் புஜாரா, இந்திய வீரர் சௌரப் திவாரி, அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச், டேவிட் மாலன், இந்திய வீரர் இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசைனி நிகிடி ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago