கோட்டாபயவுக்கு எதிராக அரபு வசந்தம் முறையில் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Mar 14, 2022 88 views Posted By : YarlSri TV
கோட்டாபயவுக்கு எதிராக அரபு வசந்தம் முறையில் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால் அரபு வசந்த பாணியில் போராட்டங்களை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி சமகி ஜன எச்சரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பது பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாறாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது கொள்கைகள் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டு, தற்போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தமது கட்சி விரும்புவதாக அவர் கூறியுள்ளார்
நாளையதினம் மார்ச் 15 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
கொழும்பில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் நிலைமைக்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறு பெர்னாண்டோ பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி பரிசீலிக்காவிட்டால், அரபு வசந்த பாணியில் போராட்டங்களை நடத்தவும் எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
அரபு வசந்தம் என்பது 2010 களின் முற்பகுதியில் அரபு உலகின் பெரும்பகுதி முழுவதும் பரவிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் தொடர் ஆகும்.
இது ஊழல் மற்றும் பொருளாதார தேக்கத்திற்கு பதில்தேடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் துனிசியாவில் ஆரம்பமான இந்த எதிர்ப்புகள் ஏனைய ஐந்து நாடுகளுக்கும் பரவியது.
லிபியா, எகிப்து, யேமன், சிரியா மற்றும் பஹ்ரைன், ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்போது கலவரங்கள், உள்நாட்டுப் போர்கள் அல்லது கிளர்ச்சிகள் உட்பட பெரும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொராக்கோ, ஈராக், அல்ஜீரியா, லெபனான், ஜோரதான், குவைத், ஓமன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டிஜிபூட்டி, மொரிட்டானியா, பாலஸ்தீனம், சவுதி அரேபியா மற்றும் மொராக்கோ ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் சிறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago