Skip to main content

தாள் தட்டுப்பாடால் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல்

Mar 14, 2022 83 views Posted By : YarlSri TV
Image

தாள் தட்டுப்பாடால் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல் 

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்தார்.



பாடசாலை பாடப்புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் காகிதம் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் டன் ஒன்றின் விலை 200,000 ரூபாவிலிருந்து உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.



பாடப்புத்தகங்களை அச்சிடுவதே அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பிரதான வருவாயாகும், இதனால் நிறுவனத்திற்கு சுமார் 1200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என அவர் கூறினார்.



அரசாங்க நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களைப் பெறுவதில் கூட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு லாட்டரி சீட்டுகள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டாலர் தட்டுப்பாடு காரணமாக காகித இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை