Skip to main content

கொரோனா தடுப்பூசி : 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல்!

Feb 11, 2021 257 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பூசி : 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல்! 

கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.



இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “புனேவைச் சேர்ந்த சீரம் மையத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.



இதன்படி சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும்.



ஏற்கனவே 20 நாடுகளுக்கு 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ், பூடான், ஆப்கன், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 63 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும்.



சமீபத்தில் கனடா 10 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரியிருந்தது. ஆனால் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை.



இதற்கு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வரவில்லை என்பது தான் காரணம் என கூறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

8 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை