Skip to main content

உக்ரைனில் ரஸ்ய தாக்குதல்களால் தொடர்ந்தும் பலியாகும் பொதுமக்கள்

Mar 08, 2022 75 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனில் ரஸ்ய தாக்குதல்களால் தொடர்ந்தும் பலியாகும் பொதுமக்கள் 

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் நடத்திய எறிகனை தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.



இதற்கிடையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தாக்குதல் பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.



இதேவேளை தலைநகர் கியேவின் மேற்கே உள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரல், இன்று அதிகாலையில் அணைக்கப்பட்டது.



கிழக்கு நகரமான சுமியில், ரஸ்யாவின் வான்வழி குண்டு தாக்குதல்களால், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை எரியுண்டது.



இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உக்ரைனின் தெற்கில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்த தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில், ரஷ்ய எறிகனை தாக்குதல்களால் ஒன்பது மாடிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் 27 அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன.



இதன்போது குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை