Skip to main content

ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

Mar 07, 2022 95 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா 

மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும்,பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.



உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும், உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும்,நிதியுதவியினையும் வழங்கி வருகின்றது.



இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் விமானங்களை தகர்க்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.



விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பென் வாலஸ், பிரித்தானியாவை சீண்டும் வேலை வேண்டாம் எனவும், எங்களைச் சோதிக்க முற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



புடின் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றே இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம் எனவும், பிரித்தானியாவையும் குறைத்து மதிப்பிடும் சர்வாதிகார தலைவர்களுக்கு என்ன ஆனது என்பது வரலாறு என்றும்,நாங்கள் ஒன்றுபட்டு, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால், விளாடிமிர் புடின் வீழ்வது உறுதி என நான் நம்புகின்றேன் என்றும் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள சேதம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும், அப்பாவி உக்ரைன் மக்கள் 1.5 மில்லியன் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் எனவும் பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.



இதனிடையே, உக்ரைன் விவகாரம் குறித்து பிரித்தானிய மூத்த தளபதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,



இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளில் பிரித்தானிய துருப்புகளுக்கு ஏற்பட்ட இழப்பை விடவும் பலமடங்கு இழப்புகளை ஒரே வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டுள்ளது.



ஆனால், இதனால் விளாடிமிர் புடின் பின்வாங்கிவிடுவார் என கருத முடியாது எனவும், இன்னும் மிக மோசமான தாக்குதலை அவர் உக்ரைனில் நிகழ்த்தக் கூடும் எனவும் பிரித்தானிய தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

12 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

12 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

12 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

12 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

12 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

12 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை