Skip to main content

தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவில் முழுவதும் தீப அலங்காரம்!

Nov 03, 2021 131 views Posted By : YarlSri TV
Image

தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவில் முழுவதும் தீப அலங்காரம்! 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடப்படும்.



இந்தாண்டு திருப்பதியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.



ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் கோவில் அருகே காட்சி அளிக்கின்றன.



இதில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு பிரத்தியோக பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது.



இதையடுத்து மாலை கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.



திருப்பதியில் நேற்று 32,365 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,681 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை