Skip to main content

எஸ்.பி.பிக்கு மேடை இசை கலைஞர்களின் இசை அஞ்சலி!

Sep 26, 2020 272 views Posted By : YarlSri TV
Image

எஸ்.பி.பிக்கு மேடை இசை கலைஞர்களின் இசை அஞ்சலி! 

எஸ்.பி‌. பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் பாடல்களைப் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.



உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணிப் திரை இசைப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்‌.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அவரது பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.



அவருக்கு அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வகையில் கோவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடை இசை கலைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய பாடல்களை பாடிய அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை