Skip to main content

இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை அரசு - காரணம் என்ன?...

Oct 17, 2021 165 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை அரசு - காரணம் என்ன?... 

கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்த நாடுகளில் முக்கியமானது இலங்கை. இலங்கையைப் பொறுத்தவரை அந்நாடு முழுக்க முழுக்க சுற்றுலா துறையையே நம்பியிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் பல்வேறு துறைகளுக்கான செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தக் கொரோனாவால் இலங்கை சுற்றுலா துறை படுத்துக்கொண்டது. இன்னமும் மீண்டெழவில்லை. 



இதைக் காட்டிலும் அந்நிய செலாவணியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை உழன்று வருகிறது. இச்சூழலில் இலங்கை அரசு இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார்  3 ஆயிரத்து 751 கோடி ரூபாய். இந்தக் கடனை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காகக் கேட்டிருக்கிறது. இலங்கை அரசுக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம் தான் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது.



இந்தக் கழகம் அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் மக்கள் வங்கி (people's bank) ஆகிய இரண்டிற்கும் கொடுக்க வேண்டிய பாக்கி மட்டும் 3.3 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 47 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடனை அடைக்காவிட்டால் மேற்கொண்டு பணம் தர முடியாது என வங்கிகள் சொல்வதால் கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியாவை நாடியுள்ளது இலங்கை அரசு. உலகளவில் ஊரடங்கு குறைந்து வருவதால் போக்குவரத்து அதிகமாகியிருப்பதால், கச்சா எண்ணெய் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது இலங்கையின் நிலைக்கு மற்றொரு காரணம்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை