பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது - அமெரிக்கா கவலை!
Oct 02, 2021 154 views Posted By : YarlSri TV
பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது - அமெரிக்கா கவலை!
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளிர் காலத்தின்போது தலிபான் தலைவர்களுக்கு இடமளிப்பது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை ஆப்கான் அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்துவிட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜான் கெர்பி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேசித் தீர்க்க விரும்புகிறோம்.
எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்லாது, பாகிஸ்தானுக்கும் பாதிப்பு உள்ளது என்பதை அந்நாடு உணரவேண்டும் என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மீது டிரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவைப்பட்டால் டிரோன் தாக்குதல் நடத்துவது தொடரும் என ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago