Skip to main content

தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்!

Sep 22, 2021 135 views Posted By : YarlSri TV
Image

தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்! 

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகம் ஒன்றில் வைத்திருந்த 50 கிலோ காலாவதியான இறைச்சியை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.



தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேற்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பானுசுதா தலைமையிலான இந்த குழுவில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், நாகராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்.



தருமபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 50 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உணவகத்திற்கு அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு, வாடிக்கையாளர்களுக்கு சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் உணவு வழஙக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை