இலங்கையில் தீவிரமடையும் ஒமிக்ரோன் - முடக்க நிலை தொடர்பான வெளியான தகவல்
Feb 04, 2022 101 views Posted By : YarlSri TV
இலங்கையில் தீவிரமடையும் ஒமிக்ரோன் - முடக்க நிலை தொடர்பான வெளியான தகவல்
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அல்லது சட்டத்தை கடுமையாக்கவோ முடியாதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே அதனை கட்டுப்படுத்த முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையானோர் ஒமிக்ரோன் மாறுபாடினால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதியாக கூற முடியும்.
சுகாதார கட்டுப்பாடுகளை உரிய முறையில் மக்கள் பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்த முடியும். அதனை தவிர்த்து இந்த தொற்றில் இருந்து விடுபடுவதற்கு எவ்வித மாற்று வழிகளும் இல்லை.
மீண்டும் ஒரு போதும் நாட்டை மூட முடியாது. ஏற்கனவே நாடு முடக்கப்பட்டமையினால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் மீண்டும் நாட்டை முடக்க முடியாது.
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago