Skip to main content

இளம் யுவதியின் விபரீத முடிவு - கடும் அதிர்ச்சியில் பெற்றோர்

Feb 02, 2022 98 views Posted By : YarlSri TV
Image

இளம் யுவதியின் விபரீத முடிவு - கடும் அதிர்ச்சியில் பெற்றோர் 

நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மீத்தலாவ மேல் பிரிவை சேர்ந்த 17 வயதான ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



காதல் விரக்தியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



தனது காதலனின் செயற்பாடு காரணமாக விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்துள்ளார்.



இந்நிலையில் தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.



குறித்த யுவதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை