உயர்தர பரீட்சை காலத்தில் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்:ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை
Feb 01, 2022 90 views Posted By : YarlSri TV
உயர்தர பரீட்சை காலத்தில் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்:ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிகளில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளரிடம் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் ஆரம்ப பிரிவிற்கான பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
அண்மைய நாட்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கோவிட் தொற்று கூடுதலாக பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது நோய் கட்டுப்பாட்டை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறைக் காலத்தின் பின்னர் நாட்டின் நிலைமையை கவனத்திற்கொண்டு பாடசாலை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 10ம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு அழைக்கப்பட்டதன் பின்னரே மாணவர்கள் மத்தியில் நோய்த்தொற்று பரவுகை அதிகரித்தது என அவர் தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago