Skip to main content

சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் ! - உண்மையை போட்டுடைத்த நடிகர் நாகர்ஜூனா..

Jan 27, 2022 108 views Posted By : YarlSri TV
Image

சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் ! - உண்மையை போட்டுடைத்த நடிகர் நாகர்ஜூனா.. 

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா 4 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்து இருந்தனர்.



இதனிடையே நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகர்ஜூனா அவர்கள் பிரிவு குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.



அவர் கூறியதாவது "சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டுமென்று விண்ணப்பித்தார். நாக சைதன்யா சமந்தாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தாலும், நான் என்ன நினைப்பேன், குடும்ப பெயர் என்னவாகும் என்பது குறித்து மிகவும் கவலைப்பட்டார்.



நான் மிகவும் கவலைக்கு உள்ளாவேன் என நினைத்த நாக சைதன்யா எனக்கு ஆறுதல் கூறினார். 4 வருடம் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பிரச்னை அவர்களுக்குள் வந்ததில்லை.



இருவரும் நெருக்கமாகத்தான் இருந்தார்கள். ஆனால் இப்படியான முடிவை அவர்கள் எடுக்க என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. 2021 ஆம் புத்தாண்டை கூட ஒன்றாகத்தான் கொண்டாடினார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஏதோ பிரச்னை ஏற்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.  


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை