கொடூரமாக தாக்கி மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட கணவன்!..
Jan 20, 2022 104 views Posted By : YarlSri TV
கொடூரமாக தாக்கி மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட கணவன்!..
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 6 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
55 வயதான தனது கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி ரஞ்ஜினி எதுத்சூரிய என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது கணவனின் தலையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்தவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கணவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கல்பாத்த, பருவபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையில் அன்றைய தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதன் போது சிலர் தன் முன்னிலையில் கணவனை கொடூரமாக தாக்கியதாகவும் ஒருவர் அவரது கழுத்தை நெறித்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago