Skip to main content

திடீர் என மயங்கிய மாணவர்கள்.

Jan 19, 2022 104 views Posted By : YarlSri TV
Image

திடீர் என மயங்கிய மாணவர்கள். 

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



ரொசல்ல- பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



எனினும் மாணவர்களின் உடல் நிலையில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும், அப் மலையகத்தில் காணப்படும் கடும் வெயிலுடனான வானிலையால் மாணவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்றும், பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.



இந் நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 8 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை