உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..
Jan 12, 2022 89 views Posted By : YarlSri TV
உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது வீடுகளிலும் கரும்பு வாங்குவது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஒரு சில வீடுகளில், வாங்கிய கரும்பை யாரும் உண்ணாமல் அது அப்படியே காய்ந்து கிடக்கும். இனி அது போல கரும்பை விடவேண்டிய அவசியம் இல்லை. கரும்பை வெட்டி அதில் இருந்து சாறு எடுத்து, அதன் மூலம் செய்ய கூடிய அருமையான கரும்பு சாறு பொங்கலை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1/2 கப் பச்சரிசி, 1/4 கப் பாசிப் பருப்பு, 3 கப் கரும்பு சாறு, 3 முதல் 4 டீ ஸ்பூன் நெய், 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள், 8 முந்திரி, 10 காய்ந்த திராட்சை, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் நெய் விடவேண்டும். பிறகு அதோடு 1/4 கப் பாசிப் பருப்பு சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வறுக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவிய 1/2 கப் பச்சரிசியை எடுத்துக்கொண்டு அதோடு, வறுத்தெடுத்த பாசிப் பருப்பை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இந்த கலவையோடு 3 கப் கரும்புச் சாறை சேர்க்க வேண்டும். பின்பு இதை குக்கரில் வைத்து 5 முதல் 6 விசில் வரும் வரை விட வேண்டும்.பின்பு குக்கரை திறந்து அதில் உள்ளவை அனைத்தும் சிறிதளவு மசியும் வகையில் சற்று அழுத்தியவாறு கிளறிவிட வேண்டும்.
பின்பு இந்த கலவையோடு 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். அடுத்ததாக மீண்டும் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 3 டீ ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும். பிறகு அதில் 8 முந்திரியை சேர்த்து, முந்திரி இளம் பழுப்பு நிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதில் 10 காய்ந்த திராட்சை சேர்த்து ஓர் இரு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின்பு இந்த கலவையை, ஏற்கனவே சமைத்து வைத்துள்ள பொங்கலோடு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான கரும்பு ஜூஸ் பொங்கல் தயார். இதில் இனிப்பு சற்று அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago