நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்
Dec 29, 2021 71 views Posted By : YarlSri TV
நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், அவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது ஒரே நோக்கமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதன்போது ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் தான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போனதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
அத்துடன், தமக்கு யாருடனும் போட்டி இல்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது ஒரே குறிக்கோள் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லையென தெரிவித்தார்.
கூட்டாகச் செயற்படும் கலையை தான் நன்கு அறிந்தவர் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago