உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்... நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
Mar 27, 2022 86 views Posted By : YarlSri TV
உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்... நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.
மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.
4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறக்குமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, மரியுபோல் நகர வாசிகளை தங்கள் நாட்டிற்கு ரஷ்ய படைகள் நாடு கடத்தி வருவதாகவும், நகரல் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டுப்பட்டுள்ளது.
மேலும், மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்ய குண்டு போட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, மரியுபோலில் உள்ள பிரசவ மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் சர்வதேச அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரின் புகைப்படும் இணையத்தில் வெளியாகியுள்ளது.அதில், நகரம் முழுவதும் சிதைந்து, கட்டிடங்கள் நொறுங்கி, ஆங்காங்கே கரும் புகை வருவதை காட்டுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago