18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
Dec 19, 2021 97 views Posted By : YarlSri TV
18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுவதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
நெல்லையில் தனியார் பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளிகளை இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் பேசிய ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1072 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடடிவக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர் பிரபுசங்கர், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள கட்டிடங்களை அதே துறை சார்ந்த அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிலித்தார். இந்த ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago