ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - 20 பேர் மாயம்!
Jul 04, 2021 170 views Posted By : YarlSri TV
ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - 20 பேர் மாயம்!
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த 3 நாட்களாக பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
மழை நீரும், மண்ணும் கலந்து சரிந்ததில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்தன. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதுவரை 20 பேரை காணவில்லை. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுவரை 2 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இந்தப் பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா அதிரடி படை ஒன்றை அனுப்பியுள்ளார். போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago