ஒக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
Apr 22, 2021 187 views Posted By : YarlSri TV
ஒக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்கு முன்பதாகவே 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் சுராஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியுள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறியதுடன் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் ராஜேஷ் டோபே அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago