வழமைக்கு திரும்புகிறது யாழ்ப்பாணம் -அரசாங்க அதிபர் அறிவிப்பு
May 09, 2020 385 views Posted By : YarlSri TV
வழமைக்கு திரும்புகிறது யாழ்ப்பாணம் -அரசாங்க அதிபர் அறிவிப்பு
எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ் மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும்.
எனினும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப்போக்குவரத்து, வர்த்தகர்கள் ,சிகை அலங்கரிப்பாளர்கள் , உணவக உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதாரநடைமுறையை பின்பற்றி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
யாழ் மாவட்டமானது வழமைக்குத் திரும்புகின்ற போதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை.
எனவே மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட்டு அனாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராது தேவையான விடயங்களுக்கு மட்டும் வெளியில் வந்து தமது தேவைகள் முடிந்த பின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அரசாங்கஅதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago