மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி வாக்குப்பதிவு… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…
Mar 12, 2021 195 views Posted By : YarlSri TV
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி வாக்குப்பதிவு… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாதிரி வாக்குப் பதிவை, ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் கருவி மூலம் அறிந்து கொள்ளும் விதமாகவும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago