உத்தமபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கூலி தொழிலாளி, மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!
Feb 17, 2021 238 views Posted By : YarlSri TV
உத்தமபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கூலி தொழிலாளி, மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். முனியம்மாள், கேரளாவில் உள்ள தேயிலை எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
முனியம்மாளுக்கு உடன் பணிபுரியும் நபருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சந்திரன் கண்டித்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு புறப்பட்ட முனியம்மாளை பணிக்கு செல்ல வேண்டாம் என்று சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.
அதனையும் மீறி முனியம்மாள் புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் அங்குள்ள கோழிப்பண்ணையின் அருகே நடந்துசென்ற முனியம்மாளை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த, தேவாரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்திரனை தேடி வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 3,175 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!
-
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டதால், சரக்கு வாங்க குடிமகன்கள் கூட்டம்!
-
‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago