வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாவது தடவையாக இன்றும் பி.சி.ஆர் பரிசோதனை!
Feb 24, 2021 216 views Posted By : YarlSri TV
வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாவது தடவையாக இன்றும் பி.சி.ஆர் பரிசோதனை!
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாவது தடவையாக இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் பட்டாணிச்சூரில் கண்டுபிடிக்கப்பட்ட சமூகப்பரவலையடுத்து வவுனியா நகரம் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்புபட்டவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பி.சி.ஆர் . பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து மீண்டும் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு தொற்று ஏற்படவாய்ப்புக்கள் காணப்படுவதையடுத்து பொது மக்களின் நன்மை கருதி வவுனியா வர்த்தகர் சங்கம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையுடன் இணைந்து இன்று வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்குப் பி.சி .ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இந்நடவடிக்கைக்கு நகரிலுள்ள வர்த்தகர்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி சமூகத்தில் எற்படவுள்ள நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முன்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago