பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசிய தாய்!
Feb 24, 2021 173 views Posted By : YarlSri TV
பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசிய தாய்!
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுபற்றி திருச்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, அங்கு ஒரு சாக்குப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த பையை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.
விசாரணையில், அந்த குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததும், அதனால் அந்த குழந்தையை அதன் தாய் சாக்குப்பையில் வைத்து வீசிச்சென்றதும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago