Skip to main content

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்!

Feb 09, 2021 210 views Posted By : YarlSri TV
Image

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்! 

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.



சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியை சேந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் இருவருடன் நேற்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடித்து நேற்றிரவு 5 பேரும் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.



இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை