சாண்ட்டரி நாப்கின்களை பெண்களுக்குக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது!
Nov 26, 2020 247 views Posted By : YarlSri TV
சாண்ட்டரி நாப்கின்களை பெண்களுக்குக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பொது இடங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என கல்வி நிலையங்களிலும் பெண்களுக்கு தேவையான சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மோனிகா லெனான் என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். வறுமை காரணாமக சாணிட்டரி நாப்கின் மற்றும் அது சார்ந்த பொருட்களை சில பெண்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதால் அந்த பொருட்களை நாட்டு பெண்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டது.
அந்த மசோதா மீதான விவாதம் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பின் சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வகை செய்யும்
மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பில் மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் மசோதா சட்டமாக உருவாகியுள்ளது.
இதையடுத்து, பெண்களுக்கு சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது.
மேலும், ஸ்காட்லாந்து அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
80 லட்சம் மாத வாடகையில் ஆடம்பர அமைச்சு காரியாலயம் வேண்டாம் என நிராகரித்த ராஜாங்க அமைச்சர் - அமைச்சர் பிரசன்ன ரனவீர
-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இராணுத்தினர் தரப்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது!..
-
ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் - 62 கைதிகள் பலி
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago