மறுஉத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது!
Jan 14, 2021 259 views Posted By : YarlSri TV
மறுஉத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது!
போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமீபத்தில் அறிவித்தார். விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, சொட்டு மருந்து போடப்படும் என்று அவர் கூறினார்.
இப்பணி, 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
இந்த சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘‘17-ந் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago