Skip to main content

டிக் டாக் செயலி பதவியை ராஜினாமா செய்த சி.இ.ஓ. !

Aug 28, 2020 274 views Posted By : YarlSri TV
Image

டிக் டாக் செயலி பதவியை ராஜினாமா செய்த சி.இ.ஓ. ! 

லடாக் விவகாரம் காரணமாக டிக் டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன.



இதனால் டிக் டாக்கிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொது மேலாளர் வனேசா பாப்ஸ் தற்காலிக சி.இ.ஓ.வாக செயல்பட உள்ளார்.



அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ள டிரம்ப் நிா்வாகத்தின் உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனம் சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் தலைமை நிா்வாக அதிகாரி கெவின் மேயா் ராஜிநாமா செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை